அய்யரின் கொடும்பாவியை எரித்த அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யரின் கொடும்பாவியை அதிமுகவினர் எரித்தனர்.
இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கூடிய அதிமுகவினர் அய்யரின் கொடும்பாவியைஎரித்துவிட்டு அவரையும் காங்கிரஸ் கட்சியையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்ட பின் கலைந்து சென்றனர்.
நாகப்பட்டிணம் விழா மேடையில் முதல்வரிடம் தவறாகப் பேசியதைக் கண்டித்து இந்தக் கொடும்பாவிஎரிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். கொடும்பாவி எரிப்பை போலீசார் தடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications