டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்களிடம் 31ம் தேதி விசாரணை முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வரும் 31ம்தேதியுடன் விசாரணை முடிவடைகிறது.
ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 6072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இவர்களது வழக்கை ஓய்வு பெற்ற 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்று பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டைமாவட்ட ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடந்தது.
கடைசி நாளான 31ம் தேதியன்று விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் விசாரணைநடக்கவுள்ளது. விசாரணைக்குப் பின்னர் நவம்பர் முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications