கஞ்சா வழக்கு: ஜனனிக்கு 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜனனி உள்ளிட்ட 3 பேருக்கு 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படவுள்ளது.

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மதுரை இளம் பெண் ஜனனி, அவரது தாயார்மற்றும் அவர்களது ஓட்டுநர் சதீஷ் ஆகிய 3 பேருக்கும் வரும் 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும்என்று மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனனி, அவரது தாயார் ரெஜீனா மற்றும் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டு விட்டது. இன்று அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாக இருந்தது.

அவர்கள் கஞ்சா கடத்த துணை போனதாகவும், ஒரு திடீர் சோதனையின் போது அவர்களிடமிருந்து ஒன்றரைகோடி, 10 கிலோ கஞ்சா, 22 சவரன் தங்கம் அகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகைதெரிவிக்கிறது.

ஆனால் இன்று ஜனனியும், சதீஷும் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். ரெஜீனாவுக்கு உடல் நலம்சரியில்லாத காரணத்தால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.

இதையடுத்து வரும் 20ம் தேதி 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அன்றைய தினம்குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்றும் நீதிபதி சம்பத் குமார் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜனனியும், சதீஷும் மீண்டும் திருச்சி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+