சோ.பா, இளங்கோவனுடன் அய்யர் டெல்லி விரைவு
சென்னை:
காரைக்கால் அருகே அதிமுகவினரால் தாக்கப்பட்ட மணிசங்கர அய்யர் எம்.பியுடன், தமிழக காங்கிரஸ்தலைவர்கள் சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் டெல்லி சென்றனர்.
டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து அவர்கள் விளக்கவுள்ளனர்.
இவர்கள் தவிர ஜி.கே.வாசன், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். அய்யர்தாக்கப்பட்டது தொடர்பாக புதுவை மாநில போலீசார் தான் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இன்று நடக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத்தின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும்இவர்கள் கலந்து கொள்வார்கள்.
அய்யர் தாக்கப்பட்ட விவகாரத்தை பெரிதாக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரச்சனையைவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கிளப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடரவும் அய்யர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications