For Daily Alerts
Just In
ஆத்திரத்தில் மனைவி கொலை: வருத்தத்தில் கணவர் தற்கொலை !
புதுக்கோட்டை:
கோபத்தில், மனைவியைக் கொன்ற கணவர், பெரும் வருத்தமடைந்து விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது இரண்டாவது மனைவிமாக்கண்ணு. அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம்.
புதன்கிழமை இரவு கருப்பையா வயல் வேலைக்குச் சென்றிருந்தார். அவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார்மாக்கண்ணு. அப்போது இருவருக்கும் ஏதோ காரணத்திற்காக சண்டை மூண்டுள்ளது.
ஆத்திரமடைந்த கருப்பையா கையில் வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டிக் கொன்றார். பயந்து போனகருப்பையா வயலுக்குப் போட வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran uranium electricity mani kural art gallery florals jothika amoga
Story first published: Friday, October 17, 2003, 5:30 [IST]