டிச. 1 போராட்டம்: அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறுவோம் - ஸ்டாலின்
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதிலும் திமுக சார்பில் டிசம்பர் 1ம் தேதி நடத்தவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அரசு அனுமதிதராவிட்டால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் போராட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
டிசம்பர் 1ம் தேதி அதிமுக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளை எதிர்த்தும், பொடாவைவாபஸ் பெறக் கோரியும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படுகிறது.
அந்தப் போராட்டத்திற்கு அரசும், காவல்துறையும் அனுமதி தராவிட்டால் தடையை மீறி போராட்டம்நடத்தப்படும்.
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளதால், அதிலிருந்து மக்களை திசை திருப்பவே, மணிசங்கர அய்யர் எம்.பி. மீது தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.
எம்.பி. மீதே தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஜெயலலிதாவின் பேச்சு தூண்டுதலாக அமைந்துள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications