For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண்ணையாரின் இன்னொரு கூட்டாளி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் இன்னொரு கூட்டாளியை சென்னை நகரபோலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பணக்காரர் வெங்கடேச பண்ணையார் சமீபத்தில் சென்னையில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சில நாட்களுக்கு முன் மெரீனா கடற்கரையில் பண்ணையாரின் கூட்டாளி என்று ஒருவரை போலீஸார் கைதுசெய்தனர். தற்போது கேரளாவைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்துள்ளனர்.

அவரது பெயர் ஷாஜி குருவில்லா. ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வந்தார். அதன் பின்னர் 2001ம் ஆண்டு தி.நகர் பகுதியில் சூதாட்ட கிளப் ஒன்றை ஆரம்பித்தார்.

ரகசியமாக நடத்தி வந்த இந்தத் தொழிலுக்கு வெங்கடேச பண்ணையார் தான் பாதுகாப்பு தந்து வந்ததாக போலீசார்கூறிகின்றனர்.

மேலும் பண்ணையார் தனது ரகசிய வேலைகள் அனைத்தையும் குருவில்லாவின் சூதாட்ட கிளப்பில் வைத்துத் தான்மேற்கொள்வார் என்றும் கூறுகின்றனர்.

ஷாஜி குருவில்லாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X