வைகோவுக்கு எதிரான முக்கிய சாட்சியான மதுரை எஸ்.ஐக்கு கட்டாய ஓய்வு
சென்னை:
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வழக்கறிஞரை தரக்குறைவாகபேசியதால் மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மதுரை திருமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்சென்னகேசவனுக்கு அரசு கட்டாய ஓய்வு (compulsory retirement) கொடுத்துள்ளது.
மதுரை, திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோஉள்ளிட்ட மதிமுகவினர் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பின் 2-வது முக்கிய சாட்சியாக திருமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்சென்னகேசவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணையின்போது, சாட்சியம் அளிக்க வந்த சென்னகேசவன், நீதிமன்றத்திலேயே வைகோவின்வழக்கறிஞரை மிகத் தரக் குறைவாகத் திட்டினார்,
இதையடுத்து வைகோவின் வழக்கறிஞர் நீதிபதி ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து வைகோவின் வழக்கறிஞரிடம் மன்னிப்பு கேட்குமாறு சென்னகேசவனுக்கு நீதிபதிஉத்தரவிட்டார். இதனால் அவரிடமும், நீதிபதியிடமும் மன்னிப்பு கேட்டார் சென்னசேகவன்.
இந் நிலையில் சப் இன்ஸ்பெக்டர் சென்னகேசவனுக்கு தமிழக அரசு திடீரென கட்டாய பணி ஓய்வு கொடுத்துவீட்டுக்கு அனுப்பியுள்ளது. நேற்று முன் தினம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வைகோ வழக்கில் இவர் அவருக்கு எதிராக தீவிரமாக சாட்சி சொல்லவில்லை என்ற காரணத்தினாலேயே அவர்தூக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications