தன்ராஜ் பிள்ளையை மீண்டும் ஹாக்கி அணியில் சேர்க்க வைகோ கோரிக்கை
சென்னை:
இந்திய ஹாக்கி அணியில் தன்ராஜ் பிள்ளையை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ஹாக்கி அணியிலிருந்து கேப்டன் தன்ராஜ் பிள்ளை உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஹாக்கி அணியின் மேலாளருக்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு வைகோ பெரும் வருத்தம் தெரிவித்துள்ளார். வேலூர் சிறையிலிருந்து இந்திய ஹாக்கி சங்கத்திற்கு இதுதொடர்பாக வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நாட்டுக்காகவும், கடுமையாகவும் விளையாடி வெற்றிக்காகப் பாடுபடக் கூடிய வீரர் தன்ராஜ் பிள்ளை.அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஹாக்கி ரசிகர்களுக்கு, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஹாக்கி ரசிகர்களுக்குபெரும் வருத்தம் தந்துள்ளது.
எனவே தன்ராஜ் பிள்ளை போன்ற உண்மையான விளையாட்டு வீரர்களை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும்என்று இந்திய ஹாக்கி சங்கத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் வைகோ.
தன்ராஜ் பிள்ளை, தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications