மழையை வென்ற கிரிக்கெட்
சென்னை:
மழை காரணமாக நடக்குமா, இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்த இந்திய, நியூசிலாந்து அணிகளுக்குஇடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர்இன்று சென்னையில் தொடங்கியது. இன்று நடக்கும் முதல் போட்டியில், இந்தியாவும், நியூசிலாந்தும்மோதுகின்றன.
பகல் இரவுப் போட்டியாக நடக்கும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது.
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக கிரிக்கெட் போட்டி நடக்குமா என்றசந்தேகம் எழுந்தது. ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. மைதானத்தின் பிற பகுதிகளும் கூட மூடப்பட்டன.
மைதானத்தில் தேங்கும் நீர், ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்வாப்பர் கருவி மூலம்அகற்றப்பட்டது. இருப்பினும், நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மறுபடியும் மைதானம்தெப்பமாகிவிட்டது. இதையடுத்து தொடர்ந்து நீர் அகற்றும் பணி நடந்தது.
மழை இல்லாத காரணத்தால் ஆட்டம் தொடங்கியது. அதே நேரத்தில் மேகமூட்டம் நிலவுகிறது. எப்போதுவேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலையில் இன்றைய ஆட்டம் நடந்து வருகிறது.
ஆட்டத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில்திரண்டுள்ளனர். தீபாவளியைக் கூடப் பொருட்படுத்தாமல் பல ரசிகர்கள் வெளியூர்களிலிருந்து இங்கு வந்திருப்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியா ஜெயித்தால் அதுதான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று அவர்கள்கூறுகிறார்கள்.
மழை வராமல் இருக்க வேண்டும், ஆட்டத்தில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்பதே சேப்பாக்கத்தில்குழுமியிருக்கும் ரசிகர்களின் தாரக மந்திரமாக உள்ளது.