சுடப்பட்ட நீதிபதியின் மருமகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் அனுமதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
| திருச்சியில் மர்ம நபர்களால் சுடப்பட்ட நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடசேன் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நீதிபதி ராமன் தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. |
இதில் இடுப்புப் பகுதியில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் திருச்சியில் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு உடலில் இருந்த குண்டுநீக்கப்பட்டது.
ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நிலை மோசமானது. தொடர்ந்து அவர் கவலைக்கிடமானநிலையிலேயே இருந்ததால், நேற்றிரவு விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications