புதிய தலைமைச் செயலகம்: பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கான பூமி பூஜைபணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. தலைமைச் செயலகத்தைவடிவமைப்பதற்கான உரிமையும் சென்னையைச் சேர்ந்த என்ஜினியரிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தமிழகத்தில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்களுக்கு பூமி பூஜை எல்லாம் நடத்தப்படுவது இல்லை.அடிக்கல் நாட்டு விழா நடக்கும். அதைத் தொடர்ந்து நேரடியாக கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும்.

ஆனால், பூஜை நடத்திய பின்னரே கட்டுமானப் பணிகளைத் தொடங்குவது என்று தீவிரமாக உள்ளார் முதல்வர்ஜெயலலிதா. தனது ஆஸ்தான ஜோதிடர் குறித்துக் கொடுத்தபடி வரும் 30ம் தேதி காலை 8 மணிக்கு பூமி பூஜைநடத்தவுள்ளார் ஜெயலலிதா.

இந்த பூஜைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் காஞ்சி சங்கராச்சாரியாரையும் பங்கேற்கச்செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

ஏற்கனவே மண் பரிசோதனை முடிந்து விட்ட நலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ள பகுதியில்தரையை புல்டோசர்கள் மூலம் சமப்படுத்தும் பணிகளும் முடிந்துவிட்டன.

தற்போது அங்கு பூஜைக்காக பந்தல் போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகே உள்ள சர்தார்படேல் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள்இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

போக்குவரத்தை வேறு பாதைக்குத் திருப்புவது, கன ரக வாகனங்களைத் தடை செய்வது போன்றவை குறித்துஆலோசனைகள் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+