நீதிபதி மருமகனை சுட்டவர்கள் நெல்லையில் பதுங்கல்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடேசன் சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நெல்லையில்பதுங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் திருச்சியில் இருந்து தனிப்படை போலீஸார்திருநெல்வேலி விரைந்துள்ளனர்.

வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ராமனின்மருமகன் வெங்கடேசன், திருச்சியில் உள்ள அவரது வீட்டில் கடந்த 22ம் தேதி இரவு சிலரால் சுடப்பட்டார்.

படுகாயமடைந்த அவர் கோமா நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வெங்கடசேனை சுட்டவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனிப்படையினர் இதுவரை திருச்சியில் 20 பேடரிம் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்கள் அளித்ததகவலின்படி குற்றவாளிகள் நெல்லையில் பதுங்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதனால் நெல்லைக்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளதாகவும் திருச்சி போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,சென்னைக்கும் ஒரு தனிப்படை விரைந்துள்ளது.

சிகிச்சை பெற்று வரும் வெங்கடேசன் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+