சென்னையில் தமிழிசை விழா: ராமதாஸ் ஏற்பாடு
சென்னை:
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் டிசம்பர் 17, 18ம் தேதிகளில் சென்னையில் தமிழ் இசைப்பெருவிழா நடைபெறுகிறது.
இது தொடர்பாக அறக்கட்டளையின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
தமிழிசையை வளர்க்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்படுகிறது. டிசம்பர் 17ம் தேதி காலையில் தமிழிசைஆய்வரங்கமும், இசையரங்கமும் நடைபெறும், காரைக்கால் அம்மையார் பாடிய திருமுறைப் பாடல்கள், மூவர்தேவாரம், திருவாசகம் முதலியவை பாடப்படும்.
பிற்பகலில் சங்கத் தமிழ் நூல்களில் உள்ள இசை வடிவங்கள், தாயுமானவர் பாடல்கள், ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தம், வள்ளலார் பாடல்கள், சீர்காழி தமிழிசை மூவர் பாடல்கள் குறித்த இசையரங்கமும், கருத்தரங்கமும்நடைபெறும்.
18ம் தேதி சித்தர் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், குணங்குடி மஸ்தான் மெய்ஞ்ஞானகீர்த்தனைகள், வேதநாயகம் பிள்ளை சமரசக் கீர்த்தனைகள், காவடிச் சிந்து, பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்இடம்பெறும்.
தமிழிசைக் கருவிகளை மீட்டும் கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும் என்றார்.
பெங்களூர் தமிழ் சங்க பொங்கல் விழா:
ஜனவரி 15 தேதி முதல் 24ம் தேதி வரை பெங்களுர் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது.
இதனையொட்டி ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மி, கோலாட்டம், குறவஞ்சி உள்ளிட்ட நாடகங்கள்,சிலம்பம்,கோலப்போட்டி, மாறுவேடப்போட்டி, மெல்லிசைப் போட்டி ஆகியவை நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளதாக தமிழ்ச் சங்கத் தலைவர்க.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications