எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோருகிறது இந்து முன்னணி

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் நரிக்குறவர்களை மதமாற்றம் செய்ததற்காக, சென்னை பிஷப் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவடம் இந்து முன்னணி அமைப்பு மனு கொடுத்துள்ளது.

ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்த பிறகு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் வெள்ளையப்பன்செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம், பஞ்சமதங்கம் ஏரிப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்குஆக்கிரமித்து குடிசை போட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பலரும் உதவிகள் செய்தனர்.

ஆனால் சென்னையைச் சேர்ந்த பிஷப் எஸ்ரா சற்குணம், தனது இவாஞ்சலிகல் சர்ச் என்றஅமைப்பின் மூலம்,நரிக்குறவர்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்து, மூளைச் சலவை செய்து,கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளார்.

நரிக்குறவர்கள், ஏரிப் பகுதியை ஆக்கிரமித்துத் தங்கியிருந்தவர்கள். அவர்களுக்கு உதவுவதாக கூறி கட்டாயமதமாற்றம் செய்துள்ளனர். எனவே எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார் வெள்ளையப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+