பூமி பூஜையில் உயிர் பலி: இளங்கோவன் தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை புதிய தலைமைச் செயலகத்திற்கான பூமி பூஜைநடந்தபோது உயிர்ப் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்றுகாலை புதிய தலைமைச் செயலகத்திற்கான பூமி பூஜை நடந்துள்ளது. அப்போது செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
பூமி பூஜையை படம் எடுக்க புகைப்படக்காரர்களுக்கு அனுமதி தராதது சட்ட விரோதம் ஆகும்.
எனக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம், பூமி பூஜையின்போது அங்கு உயிர்ப் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம்.அதனால்தான் புகைப்படக்காரர்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று சந்தேகிக்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications