For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியாறு அணை: ஆங்கிலேயப் பொறியாளரின் பேரன் வியப்பு!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

110 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை, அந்த அணையைக் கட்டியஆங்கிலேயப் பொறியாளரின் பேரன் பார்த்து வியந்தார்.

மதுரை, தேனி மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கட்டப்பட்டது பெரியாறுஅணை. 110 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பென்னி குக் என்ற ஆங்கிலேயப் பொறியாளர்வடிவமைத்துக் கட்டியது இந்த அணை.

மதுரை, தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வரும் இந்த அணை இன்றும் பொலிவுமாறாமல், கம்பீரமாக காட்சியளிக்கிறது. பென்னி குக்கின் கொள்ளுப் பேரன் ஸ்டூவர்ட் சாம்சன் தனது தாத்தாகட்டிய அணையைப் பார்வையிட நேற்று தேனி வந்தார்.

அணைக்கு சென்று பார்த்த சாம்சன், அதன் உறுதித் தன்மை, அழகைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். தனதுதாத்தாவும், அவருடன் பணியாற்றியவர்களும் சேர்ந்து கட்டிய இந்த அணை மிகப் பெரிய சாதனை என்றுபாராட்டினார். பின்னர் பென்னி குக் வாழ்ந்த வீட்டையும் பார்த்தார் சாம்சன். தாத்தாவின் சிலைக்கு மாலைஅணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X