For Daily Alerts
Just In
ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கடத்தல்: இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமநாதபுரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். இதனால்அப்பகுதியில் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், முனீஸ்வரன், கணேசன், அருள்தாஸ், வேல்சாமி, முருகன், குணசேகரன்,முருகேசன் ஆகிய 8 மீனவர்கள் சனிக்கிழமை 2 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலைஇவர்கள் திரும்பி வந்திருக்க வேண்டும்.
ஆனால் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கிமுனையில் பிடித்துச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம்ஏற்பட்டுள்ளது.
பிடித்துச் செல்லப்பட்ட 8 மீனவர்களும் தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, November 3, 2003, 5:30 [IST]