திமுக எம்.பி. வீட்டில் ரூ.25,000 கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ஜெயங்கொண்டம்:
திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். சிவசுப்ரமணியனின் வீட்டில் ரூ. 10,000 ரொக்கப் பணமும், வெள்ளிப்பொருள்களும் திருடப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சேர்ந்த எஸ். சிவசுப்ரமணியன் எம்.பி. தனது குடும்பத்தாருடன் வீட்டின்மாடியில் தூங்கியிருக்கிறார். அதிகாலை 4 மணிக்கு ஒரு திருமணத்திற்குக் கிளம்புவதற்காக அனைவரும் கீழேவந்தபோது, வீட்டில் களவு நடந்திருப்பது தெரிய வந்தது.
சமயலறையின் ஜன்னலைப் பெயர்த்தெடுத்து திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டில் இருந்த ரூ.10,000பணம் மற்றும் ரூ.15,000 மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களை அவர்கள் திருடியுள்ளனர்.
இது குறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications