தூர்தர்ஷனுக்கு எதிராக வழக்கு
சென்னை:
கிரிக்கெட் வர்ணனைக்காக தூர்தர்ஷன் அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் செய்திகளை நிறுத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சக்தி என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கிரிக்கெட் போட்டிகளின்போது, தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் பலசெய்தி அறிக்கைகள் ரத்து செய்யப்பட்டு விடுகின்றன.
நேரடி வர்ணனைக்கு வசதியாக இந்த செய்தி அறிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால், தூர்தர்ஷனைமட்டுமே பார்க்கும் வசதி கொண்ட லட்சக்கணக்கான மக்கள் செய்திகளை அறிய முடியாமல் தவிக்கும் நிலைஏற்படுகிறது.
கடந்த 23ம் தேதி சென்னை தூர்தர்ஷன் செய்தி நேரங்களில் தாறுமாறான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.கிரிக்கெட் போட்டியை தடங்கல் இல்லாமல் ஒளிபரப்புவதற்காகவே இந்த மாற்றங்கள்மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தூர்தர்ஷனுக்கு தனியாக விளையாட்டு அலைவரிசை உள்ளது. விளையாட்டுத் தொடர்பான அனைத்தையும்அதிலேயே ஒளிபரப்பலாம். அதை விடுத்து மற்ற நிகழ்ச்சிகள், செய்திகளை ரத்து செய்தது சட்டவிரோதமானதுஎன்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கியபெஞ்ச் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் பிரசார் பாரதி நிறுவனத்திற்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications