திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சந்திக்க தயார்: காளிமுத்து
சென்னை:
திமுக என் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதைச் சந்திக்கத் தயார் என்று சபாநாயகர்காளிமுத்து கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து நடந்த விவாதத்தின் போது திமுகவினர்வெளியேற்றப்பட்டனர். இது குறித்து திமுக மூத்த தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
இலவச மின்சாரம் தொடர்பாக விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய ரூ.49 கோடியில் ரூ.43 கோடியைவிவசாயிகள் மின்கட்டணமாக செலுத்தியதாக கூறுகின்றனர். மீதம் ரூ. 6 கோடி எங்கே? மணி ஆர்டர் செலவுமட்டும் ரூ.5 கோடி ஆனதாக ஜெயலலிதா கூறிய தவறான புள்ளி விவரங்களைக் கண்டித்துப் பேசினோம்.
இதையடுத்து ஜெயலலிதா சொன்ன பதிலைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறினோம். எங்கள்வெளிநடப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய சபாநாயகர், நாங்கள் சொன்ன கருத்து பதிவு செய்யப்படக் கூடாதுஎன்று கூறினார். ஆளுங்கட்சி உறுப்பினராக மாறிப் பேசும் இவரிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து திமுக தலைமையுடன் பேசிய பின் முடிவுஎடுக்கப்படும்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
திமுகவினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் காளிமுத்துவிடம் கேட்டபோது, நான் கட்சிசார்பாக நடக்கவில்லை. என் மீது எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஏற்கநான் தயார் என்றார்.