For Daily Alerts
Just In
அமெரிக்கா கவலை
வாஷிங்டன்:
அதிபர் சந்திரிகாவின் செயல்களால் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் எனஅமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அடம் எரிலி நிருபர்களிடம் கூறுகையில்,
அதிபரின் செயல், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிர்மறையான தகவலை அனுப்பலாம். இதனால்பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படுமோ என்று அஞ்சுகிறோம். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதேஅமெரிக்காவின் விருப்பம்.
இதற்காக அதிபரும் பிரதமரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
இத்தாலிய அதிபர் மூலமாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகளுடன் அமைதிப்பேச்சுவார்த்தைகளைத் தொடகும் வகையில் அதிபர் சந்திரிகாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் இணைந்துபணியாற்ற வேண்டும் என்று கோரியுள்ளன.
Comments
Story first published: Wednesday, November 5, 2003, 5:30 [IST]