வாடகைக்கு வீடு எடுத்து திருடிய 2 பேர் கைது
தஞ்சாவூர்:
வாடகைக்கு வீடு எடுத்து, பகலில் வீடுகளை நோட்டம் விட்டு, இரவில் பூட்டை உடைத்துத் திருடி வந்த 2 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சைப் பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடுவது அதிகரித்து வந்தது. இதையடுத்துதிருடர்களைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பில் 2 வாலிபர்கள் சிக்கினர். நகைகளை விற்க முயன்றபோது அவர்கள் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், மார்ட்டின், ரங்கசாமி அவர்களதுபெயர்கள் என்றும் தெரியவந்தது.
இருவரும் தஞ்சையில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளை நோட்டம் இடுவர்.பின்னர் இரவு நேரங்களில் குறிப்பிட்ட வீடுகளின் பூட்டை உடைத்துத் திருடுவர்.
இவர்களிடமிருந்து நகைகள், செல்போன்கள், டிவி போன்ற பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications