இலங்கை குழப்பம்: உஷார் நிலையில் இந்திய கடற் படை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாக தமிழகக் கடல் எல்லையில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலோரக் காவல் படையின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடற்படையும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பதற்றம் நிறைந்த பகுதிகளில் தமிழகக் காவல்துறையின் கடலோரப் பிரிவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் ராமேஸ்வரம் வழியாக ஊடுறுவலாம் என்பதால் தீவிரக் கண்காணிப்பில் கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டப் பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications