For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோட்டில் மினி பஸ்- லாரி மோதல்: 7 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

திருமண கோஷ்டியினரை ஏற்றிச் மினி பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதில் 6 பெண்கள் உட்பட 7 பேர்பலியாயினர். மேலும் 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்த இடத்திலேயே இருவர்பலியாயினர். காயமடைந்தோர் ஈரோட்டிலுள்ள மூன்று தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் நேற்று நடந்த இரு சாலை விபத்துக்களில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.

திருவண்ணாமலை அருகே உள்ளது உச்சிமலைகுப்பம் கிராமம். வெள்ளிக்கிழமை காலை இந்த கிராமத்து சாலைவழியாக சென்ற வேனும், டிராக்டரும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் டிராக்டரில் பயணம் செய்த 5பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

இறந்த பெண்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள், கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள். 12பேர் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தருமபுரியின் மார்க்கெட் அருகே நேற்று நேர்ந்த மற்றொரு விபத்தில் 3 பேர் பலியானார்கள். தர்மபுரிமார்க்கெட் அருகே இந்த விபத்து நடந்தது.

முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்ற லாரி எதிரிலிருந்து வந்த லாரியின் மீது மோதியதால் இந்தவிபத்து ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X