ஜெ. அரசை டிஸ்மிஸ் செய்ய இளங்கோவன் கோரிக்கை
சென்னை:
ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவன் கோரியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதியை கைது செய்து சிறையில்அடைத்துள்ளனர். இதற்கு முன்பு வரை விதிகளை மீறி நடக்கும் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் கலந்துகொள்ளத் தடை விதித்து சஸ்பெண்ட் செய்வதே வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால் முதல் முறையாக கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவம் இந்திய சட்டமன்ற வரலாற்றிலேயேஇதுதான் முதல் முறை.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து செய்திகளை வெளியிட்டபோது கூடஆங்கிலேயர்கள், இந்து பத்திரிக்கை மீது இவ்வளவு கடுமையான நடவடிக்கையை எடுத்ததில்லை. ஆனால்ஆங்கிலேயர்களை விட தனது ஆட்சி கொடுமையானது என்பதை ஜெ. ஆட்சி நிரூபித்து விட்டது.
இந்த அரசு இனியும் நீடிக்கக் கூடாது. உடனடியாக பிரதமர் வாஜ்பாய் இதில் தலையிட்டு அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் கூறுகையில், சட்டசபை உறுப்பினர் மீது இவ்வளவுகடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டியதில்லை. நேரடியாக அழைத்து விசாரித்திருக்கலாம்.அதேபோல, பாரம்பரியம் மிக்க இந்து பத்திரிக்கை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது கைது நடவடிக்கை என்பதுஏற்றுக் கொள்ளவே முடியாத செயலாகும் என்றார்.
பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், ஜனநாயக வரலாற்றில் நீங்காத கருப்புப்புள்ளியாக இது இருக்கும் என்றார்.
மதிமுக பொருளாளர் கண்ணப்பன் கூறுகையில், ஜனநாயகம், தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் இந்தசெயல்பாடுகள் தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றார்.
பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,தமிழகத்தின் அடித்தளத்தையே இந்த செயல் அசைத்து விடும்என்று கூறப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறுகையில், தவறுகளை திருத்திக் கொள்வதே மனித இயல்பு.ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது மேலும் மேலும் தவறுகளையே செய்து வருகிறார்கள் என்றார்.
அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவும் இதை வன்மையாகக்கண்டித்துள்ளார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறுகையில், பத்திரிக்கையில் வரும் செய்திகளை அறிக்கைகள்மூலம் மறுக்கலாம். அதைவிட்டுவிட்டு திராவிடக் கட்சிகளில் நிலவும் அடிமைத்தனத்தை பத்திரிக்கைகள் மீதும்திணிக்க அரசு முயல்வது தவறு என்றார்.
அதே போல இந்து மீதான நடவடிக்கையை எதிர்த்து மாநிலம் முழுவதும் தர்ணா நடத்தப்படும் என பா.ஜ.க.எம்.எல்.ஏவும் தீவிர ஜெயலலிதா ஆதரவாளருமான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்து மற்றும் முரசொலி மீதான நடவடிக்கைகளை சபாநாயகரும் மாநில அரசும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கோரியுள்ளார். அதே போல அரசியல் சட்ட நிபுணர்கள், ராம்ஜேத்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்கள், இடதுசாரிக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் ஆகியோருக்கும்ஜெயலலிதா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications