வாஜ்பாய்- ராம் ஆலோசனை: பத்திக்கையாளர்கள் நாளை உண்ணாவிரதம்
சென்னை:
இந்து நாளிதழின் மீது ஜெயலலிதா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அப் பத்திரிக்கையின் ஆசிரியர்என்.ராம் பிரதமர் வாஜ்பாயுடன் பேசினார்.
அப்போது தமிழகத்தில் பத்திரிக்கைகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தனதுகோபத்தை வாஜ்பாய் வெளிப்படுத்தினார்.
இந் நிலையில் இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய சபாநாயகர் காளிமுத்துஉத்தரவிட்டுள்ளதை கண்டித்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உண்ணாவிரதம் இருக்கபத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்து தலைமை ஆசிரியர் என்.ராம், ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, பதிப்பாளர் ரங்கராஜன், தலைமை நிருபர்ஜெயந்த், சிறப்பு நிருபர் ராதா வெங்கடேசன் மற்றும் முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோரைக் கைது செய்யசபாநாயகர் பிறப்பித்துள்ள உத்தரவைக் கண்டித்து சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்கள் கண்டனக்கூட்டத்தை நிடத்தினர்.
சென்னை செய்தியாளர்கள் சங்கம், பத்திரிக்கை ஆசிரியர்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு பத்திக்கையாளர்கள்அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. துக்ளக் ஆசிரியர் சோ, இந்து ஆசிரியர் என்.ராம் உள்ளிட்ட ஏராளமானபத்திரிக்கையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சபாநாயகரின் உத்தரவைக் கண்டித்து நாளை சென்னையில் உண்ணாவிரதம் இருப்பது, 12ம் தேதி மனித சங்கிலிபோராட்டம் நடத்துவது, சட்டசபை நடவடிக்கைகளை புறக்கணிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும், சபாநாயகர் காளிமுத்துவை சந்தித்து புகார் மனு அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட சோ கூறுகையில், அதிமுக அரசின் செயல்பாடுகள் மிகவும் அராஜகமாக இருக்கிறது.நிருபர்களின் வீடு புகுந்து மிரட்டுவது, பத்திரிக்கை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவது ஆகியவை மட்டமானசெயல்கள்.
விநாச காலம் விபரீத புத்தி மாதிரி தான் இந்த அரசின் செயல்பாடுகள் உள்ளன. சட்டமன்ற உரிமைக் குழுவுக்குஎன்ன அதிகாரம் உள்ளது என்பதே இன்னும் இந்த நாட்டில் தீர்மானிக்கப்படவில்லை. அப்படியிருகையில்உரிமைக் குழுவின் பரிந்துரையை வைத்து சபாநாயகர் எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும்?.
இந்தியாவில் உள்ள எல்லா பத்திரிக்கைகளும் இந்துவில் வெளியான அந்த கட்டுரையை வெளியிட வேண்டும்.அப்போது ஜெயலலிதா அரசு என்ன செய்கிறது என்பதைப் பார்ப்போம் எனறார்.
கூட்டத்தில் ஏராளமான செய்தியாளர்கள், பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள், புகைப்படக்காரர்கள் கலந்துகொண்டனர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications