ஜெ. கடிதம்: "அக்னாலட்ஜ்மென்ட்" அனுப்பினார் எஸ்.எம்.கிருஷ்ணா
சென்னை:
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் புதிய அரசாணையைக் கண்டித்து கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்ததாக எஸ்.எம்.கிருஷ்ணா பதில்அனுப்பியுள்ளார்.
நகர்ப்புறங்களில் ரூ. 50 கோடிக்கும் மேலான கட்டுமானப்பணிகள், தினசரி 1000 பேருக்கும் மேல் வந்து போகும்அளவிலான அலுவலக வளாகங்கள் கட்டும் முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்கத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுமாறு கோரி அனைத்து மாநில முதல்வர்கள், துணை நிலைஆளுநர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதில் இதுவரை ஆந்திர முதல்வர், அந்தமான்துணை நிலை ஆளுநர் ஆகியோர் மட்டுமே பதில் அனுப்பியுள்ளனர்.
இந் நிலையில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் தாங்கள் அனுப்பியகடிதம் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி என்று கூறியுள்ளார். இந்தக் கடிதத்தில், ஜெயலலிதாவின் நிலைக்கு ஆதரவுதெரிவித்தோ, வேறு ஏதும் கருத்து தெரிவித்தோ கடிதத்தில் எதையும் குறிப்பிடவில்லை எஸ்.எம்.கிருஷ்ணா.வெறுமனே, கடிதம் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications