சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியையின் கணவர்
திண்டுக்கல்:
டியூசன் படிக்க வந்த 4ம் வகுப்பு சிறுமியைப் பலாத்காரம் செய்ததாக அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பழனி வ.உ.சி தெருவில் வசிக்கும் சுப்ரமணியன்- பாக்கியலட்சுமி தம்பதியின் மகள் இங்குள்ள ஒரு பள்ளியில் 4ம்வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு எதிரே வசிக்கும் கலாநிதி என்ற பள்ளி ஆசிரியையிடம் டியூசன்படித்து வருகிறார்.
கடந்த வாரம் டியூசன் படிக்கச் சென்ற சிறுமியை, கலாநிதியின் கணவர் ஜெயச்சந்திரன் பாலியல் பலாத்காரம்செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயமடைந்த சிறுமியாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.
பின்னர் தயங்கியபடி தனது தாயாரிடம் நடந்த விஷங்களைக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் வீட்டார்பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயச்சந்திரன் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியைப் போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications