பிரபாகரனுடன் நார்வே குழு சந்திப்பு: அமைதிப் பேச்சை தொடர புலிகள் ஆர்வம்
கிளிநொச்சி:
நார்வே துணை வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசனும், சிறப்புத் தூதர் எரிக் சோல்ஹைம், இலங்கைக்கானநார்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் ஆகியோர் இன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரில்சந்தித்துப் பேசினர்.
| கிளிநொச்சியில் உள்ள புலிகளின் அரசியல் பிரிவு தலைமை அலுவலகத்தில் இச் சந்திப்பு நடந்தது. இலங்கைராணுவ ஹெலிகாப்டரில் வந்திறங்கிய இந்தக் குழுவினர் சுமார் 2 மணி நேரம் பிரபாகரனுடன் ஆலோசனைநடத்தினர்.
அப்போது புலிகளின் தரப்பில் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன், சட்ட ஆலோசகர் ருத்ரகுமாரன்ஆகியோர் உடனிருந்தனர். |
இந்தச் சந்திப்பின்போது சந்திரிகாவின் அவசர நடவடிக்கைகளால் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிவிட வேண்டாம் என பிரபாகரனிடம் நார்வே தூதர்கள் கோரிக்கை வைத்தனர். இதை பிரபாகரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டை மதித்து நடப்போம். அதேநேரத்தில் இலங்கை அரசும் உடன்பாட்டை மதித்து நடக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது நார்வேயின்பொறுப்பு.
| அமைதிப் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமானால், முதலில் கொழும்பில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவவேண்டியது அவசியம் என்பதை நார்வே தூதர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் இலங்கை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் இன்று கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், |














Click it and Unblock the Notifications