சபாநாயகர் விதித்த சிறை தண்டனை: பரிதிக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சபாநாயகர் காளிமுத்துவால் 30 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதிக்குசென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
நீதிபதி சண்முகம், நீதிபதி ராஜன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வெளியிட்டது.
சட்டசபையில் குமாரதாஸ் எம்.எல்.ஏவைத் தாக்க முயன்றதாக பரிதி மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டநிலையில், அவருக்கு மீண்டும் சிறை தண்டனை விதித்தது தவறு என்று கூறி திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிமனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காளிமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதற்கு இரு வாரகாலத்தில் அவர் பதிலளிக்க வேண்டும் என்று கூறியது.












Click it and Unblock the Notifications