கோவையில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை தொழிலாளர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆயிரக்கணக்கான பஞ்சாலைத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
காேேவையில் உள்ள தேசிய பஞ்சாலைத் தொழிலாளர்கள் போனஸ் வழங்கக் கோரி கடந்த மாதம் 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி, கருப்புக் கொடி போராட்டம் என பல வகையான போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இன்று பஞ்சாலைகளை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் சாலை மறியலில் இறங்கினர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பஞ்சாலைத் தொழிலாளர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, போனஸ் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள், அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்த ஊழியர் சங்க நிர்வாகிகள் குழு டெல்லி விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications