நாயுடுவுடன் பேசுமாறு ஜெ.வுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை:
சென்னை நகர குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக ஹைதராபாத்துக்குச் சென்று அம் மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடுவுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை நகருக்கு கண்டலேறு அணையிலிருந்து நீரைவிடுவிக்கக் கோரி நாயுடுவுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறேன்.
ஆனால் இத்தோடு நிற்காமல், அனைத்துக் கட்சிக் குழு அல்லது உயர் மட்டக் குழுவை அமைத்து அந்தக் குழுவுக்குஜெயலலிதாவே தலைமை தாங்கி ஹைதராபாத்துக்குச் செல்ல வேண்டும். நாயுடுவுடன் நேரில் பேசி சென்னைக்குஉரிய நீரைக் கேட்டுப் பெற வேண்டும்.
கண்டலேறு அணையில் தற்போது போதுமான நீர் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே சோமசீலா, ஸ்ரீசைலம்அணைகளிலிருந்து கண்டலேறு அணைக்கு நீரை திறந்து விடுமாறு ஆந்திர அரசை கேட்டுக் கொள்ள வேண்டும்என்று கூறியுள்ளார் ராமதாஸ்.