புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதை எதிர்த்து பொதுப்பணித்துறைமுன்னாள் தலைமைப் பொறியாளர் சி.குப்புராஜ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்துள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. இதற்காக பல்கலைக்கழகத்தின் பல கட்டடங்கள் இடிக்கப்படவுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது.
இந் நிலையில் தமிழக பொதுப் பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.குப்புராஜ் உள்ளிட்ட 4 பேர்அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்றுபரிசீலனை செய்தது. இதையடுத்து மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வாதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications