ஆசிரியை, பெண் சத்துணவு அமைப்பாளரின் கள்ள காதல்கள்: கொந்தளித்த பெற்றோர்
தேனி:
தேனி மாவட்டம் சடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பெண் சத்துணவு அமைப்பாளர் ஆகியோரின் கள்ளக் காதல்கள், களியாட்டங்களைக் கண்டித்து தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று அவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமை ஆசிரியை தனது அறையிலேயே கள்ளக் காதலருடன் சல்லாபம் செய்வதாகவும், அதேபோல, பள்ளியின் பெண் சத்துணவு அமைப்பாளர் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், சத்துணவு அறைக்குள்ளேயே அவர் காதல் களியாட்டத்தில் ஈடுபடுவதாகவும் சடையப்பட்டி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக உயர் கல்வி அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குமுறுகிறார்கள். இந்த நிலையில் இனி மேலும் பள்ளிக்குத் தங்களது பிள்ளைகளை அனுப்பினால் அவர்களின் மன நிலை பாதிக்கப்படும் என்று கருதிய அவர்கள் பள்ளிக்குள் புகுந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போடிநாயக்கனூர் தாசில்தார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். தலைமை ஆசிரியை மற்றும் சத்துணவு அமைப்பாளர் இருவரையும் மாற்றினால்தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறினர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்தே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications