For Daily Alerts
Just In
அழகிரி: பெங்களூருக்கு பதில் வேலூரில் தங்கியிருக்க நீதிமன்றம் ஆணை
சென்னை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள மு.க.அழகிரியின், ஜாமீன்நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
மதுரையில் படுகொலை செய்யப்பட்ட தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அழகிரி உள்ளிட்ட சிலர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
அழகிரி பெங்களூரில் தங்கியிருந்து அங்குள்ள நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டது. இந் நிலையில் தனது ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று கோரி அழகிரி சார்பில்,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், பெங்களூருக்குப் பதில் வேலூரில் தங்கியிருந்து தினசரி, உள்ளூர்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, November 19, 2003, 5:30 [IST]