மூன்றாவது அணி: பிரதமர் யார்?- பா.ஜ.க. கேள்வி
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைக்க விரும்பும் மூன்றாவது அணியில் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படுபவர் யார்என்பதை அறிவிக்கத் தயாரா? என்று பாஜக செயலாளர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று நிருபர்களிடம் கணேசன் கூறியதாவது:
ஒருநாள் சட்டசபையில் ஜெயலலிதா இது பற்றிப் பேசினார். பிறகு கூட்டணி அமைக்க எந்த முயற்சியும்எடுத்ததாகத் தெரியவில்லை. அந்தந்த கட்சித் தலைவர்களே (ஜெயலலிதா உட்பட) பிரதமராகஆசைப்படுகிறார்கள். மூன்றாவது அணி பற்றிப் பேசும் ஜெயலலிதா அதற்கு பிரதமர் யார் என்பதை இப்போதுஅறிவிக்கத் தயாரா?
வாஜ்பாயை ஆதரிப்பவர்கள் ஒரு அணியாகவும், அவரை எதிர்ப்பவர்கள் சோனியா தலைமையில் ஒருஅணியாகவும் உள்ளனர். இந்த இரண்டு அணிகள் தவிர, தேசிய அளவில் 3வது அணி அமையாது.
தமிழகத்தில் மதச் சார்புள்ள அணி, மதச் சார்பற்ற அணி என்று இரு அணிகள் உள்ளன. பாஜக உடன் கூட்டுசேர்ந்தால் மதச் சார்புள்ள அணி, கூட்டணியை விட்டு விலகினால் மதச் சார்பற்ற அணி என்ற கருத்து நிலவுகிறது.எனவே, மதச் சார்பின்மை குறித்து விவாதம் நடத்தவேண்டும்.
இப்போதைக்கு தமிழகத்தில் எந்த கட்சியுடனும் பாஜக கூட்டு கிடையாது. எங்கள் கூட்டணிக்கு வரும் எந்தகட்சியையும் வரவேற்போம் என்றார் அவர்.