பிலிம் சிட்டிக்கு இடம் மாறுகிறது டிஜிபி அலுவலகம்!
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையோரம் காமராஜர் சாலையில் உள்ள தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி)அலுவலகம் தரமணியில் உள்ள திரைப்பட நகருக்கு மாற்றப்படுகிறது. அங்கு ரூ. 30 கோடியில் புதிய அலுவலகம்கட்டப்படவுள்ளது.
காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் மிகவும் பழமையான கட்டடம் ஆகும். அங்கு பல அறைகள்பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் டிஜிபி அலுவலகத்தின் பல்வேறு பிரிவு அலுவலகங்களும்வெவ்வேறு இடத்தில் செயல்பட்டு வருகின்றன.
இந் நிலையில் டிஜிபி அலுவலகத்தை தரமணி திரைப்பட நகருக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது உள்ள டிஜிபி அலுவலகம் மூடப்படும். அங்கு காவலர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.இதற்குப் பதிலாக தரமணி திரைப்பட நகரில் உள்ள 24 ஏக்கர் நிலப்பரப்பில், 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதியடிஜிபி அலுவலக வளாகம் கட்டப்படும். ரூ. 30 கோடி செலவில் இந்த கட்டடம் கட்டப்படும்.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் இந்த அலுவலக வளாகத்தைக் கட்டும். நிர்வாக வசதிக்காகவே இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளதாாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச்செயலகம் அமையவிருப்பதால், அதற்கு அருகாமையில் இருக்கும் பொருட்டு டிஜிபி அலுவலகம் தரமணிக்குமாற்றப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
முதலில், தற்போதைய டிஜிபி அலுவலகக் கட்டடத்தை இடித்து விட்டு அங்கு நவீன டிஜிபி அலுவலகம் கட்டஜெயலலிதா அரசு தீர்மானித்திருந்தது.
ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான, பாரம்பரியம் மிக்க இந்தக் கட்டடத்தைஇடிக்கக் கூடாது என்று கூறி இந்திய தேசிய தொல்பொருள் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு அறக்கட்டளைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு பெற்றது.