விவசாயிகளிடம் ரூ. 85 கோடி மின்கட்டணம் வசூல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறு மற்றும் குறு விவசாயிகள், குடிசைவாசிகளிடமிருந்து மின் கட்டணமாக இதுவரை ரூ. 85 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், குடிசைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை அரசு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக அவர்களுக்குரிய மின் கட்டணத்தை மணி ஆர்டர் மூலம், அரசே அவர்களுக்கு அனுப்பி விடும்.

இந் நிலையில், இதுவரை 90.89 சதவீத சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது மின் கட்டணத்தை செலுத்தி விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மொத்தம் 8.56 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்த வேண்டும். மொத்தம் வசூலாக வேண்டிய ரூ. 94.43 கோடி தொகையில் ரூ. 84.92 கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது.

அதேபோல, குடிசைவாசிகளிடமிருந்து வசூலாக வேண்டிய ரூ. 5.46 கோடி தொகையில் இதுவரை 4.73 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மின் கட்டணத்தை செலுத்த இன்றுதான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+