மது விற்பனை "சூப்பர்": உற்சாகத்தில் தமிழக அரசு
சென்னை:
தமிழக அரசு திறந்துள்ள மதுக் கடைகள் மூலம் கடந்த 5 நாட்களில் மட்டும் அரசுக்கு ரூ. 80 கோடி அளவுக்குவருவாய் கிடைத்துள்ளது.
தனியார் மதுபானக் கடைகளை மூடிய தமிழக அரசு தற்போது மாநிலம் முழுவதிலும் தனது டாஸ்மாக் நிறுவனம்மூலம் மதுக் கடைகளைத் திறந்துள்ளது. இந்தக் கடைகளுக்கு பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் எதிர்ப்புதெரிவித்து வருகிற போதிலும் கூட விற்பனை அமோகமாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ. 80 கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள்தெரிவிக்கின்றன. ரூ. 70 கோடி வரை தான் டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது.
ஆனால் இந்த இலக்கையும் மீறி கூடுதலாக ரூ. 10 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளதால், அதிகாரிகள்மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு மதுபானக் கடைகளில் குளிர்சாதன பெட்டி வசதி இல்லாததால், பீர் போன்றவற்றின் வியாபாரம்இன்னும் சூடு பிடிக்கவில்லை. ஜில் பீர் மட்டுமே வேண்டும் என்று குடிமக்கள் கேட்பதால், அதைக் கொடுக்கஇயலாத நிலையில் அரசு மதுக் கடைகள் உள்ளன.
இதையடுத்து இன்னும் சில நாட்களில் அனைத்துக் கடைகளிலும் பிரிட்ஜ்களை வைக்க டாஸ்மாக் முடிவுசெய்துள்ளது.
அரசின் இந்த புதிய மது விற்பனை மூலமாக பட்ஜெட்டில் விழும் நிதிப் பற்றாக்குறை பெருமளவு குறைந்துவிடுபம்என்று நிதித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அரசின் மொத்த வருவாயும் கணிசமாக உயரும்வாய்ப்புள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வீடுகள், கோவில்கள், பள்ளிகள், மளிகைக் கடைகள், சந்தைகளுக்கு அருகே கடைகளை வைப்பதை பெண்கள்எதிர்த்து வருவதை கண்டுகொள்ளாமல், மது விற்பனை மூலம் அதிக வசூல் ஆவதை மட்டும் நினைத்து டாஸ்மாக்நிறுவனமும், அரசும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றன.
இநத்க் கடைகளை வேறிடத்துக்கு மாற்றுவோம் என அறிவித்திருந்தாலும் இதுவரை அது தொடர்பானநடவடிக்கைகள் சூடு பிடிக்கவில்லை.
சேலத்தில் மாணவிகள், பெண்கள் ஊர்வலம்
இதற்கிடையே சேலத்தில் பள்ளிக்கு அருகே அரசு மதுக்கடை வைத்திருப்பதை எதிர்த்து மாணவிகள் மற்றும்பெண்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
சேலம், சூரமங்கலம் பகுதியில் மகளிர் பள்ளிக்கு அருகே மதுக் கடை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பள்ளிமாணவிகளும், பெண்களும், பொது மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இந்தப் பள்ளியிலிருந்து மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்கிளம்பியது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்ற அவர்கள கலெக்டரைச் சந்தித்து, மதுக் கடையைஉடனடியாக அப்புறப்படுத்துமாறு கோரினர்.












Click it and Unblock the Notifications