2 நாட்களில் வைகோ விடுதலை ஆவார்: சொல்கிறார் செஞ்சியார்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோஇன்னும் 2 நாட்களில் விடுதலை செய்யப்படுவார் என்று மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா மறு ஆய்வுக் குழு வைகோ வழக்கை வேகமாக ஆய்வுசெய்து வருகிறது. எனவே இரண்டு நாட்களுக்குள் அவர் விடுவிக்கப்பட்டு விடுவார் என்றார்.
இந் நிலையில் வைகோ கைது குறித்து கடந்த இரு நாட்களாக தீவிரமாக ஆய்வு செய்த பொடா மறு ஆய்வுக் குழுமுடிவு எதையும் நேற்று அறிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications