விடுதலை புலிகளை எச்சரிக்க வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக மீனவர்களை கடத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று விடுதலைப் புலிகளை மத்திய அரசு எச்சரிக்கவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைகடற்படையினரும்,இலங்கை மீனவர்களும் அடிக்கடி, தமிழக மீனவர்களை கடத்திச் செல்வதைத் தடுக்கக் கோரிபலமுறை தங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக கடந்த 16ம் தேதியும் கடிதம் எழுதியிருந்தேன். இந்தச் சூழ்நிலையில்ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்தியதாகத் தகவல் வெளியானது.ஆனால் அந்த மீனவர்கள் திரும்ப வந்த பிறகு, அவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள் எனதெரியவந்துள்ளது.

தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியுள்ளது, தமிழக பாதுகாப்புக்கு மட்டுமல்லாது இந்தியாவின்பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். இந்தியாவின் இறையாண்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தமிழக மீனவர்களை கடத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசுஎச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்ஆக்கிரமித்துள்ளனர்.

மன்னார் வளைகுடாப் பகுதியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் கூட்டு ரோந்து வர ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+