"புள்ளி ராஜா"வை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு
சென்னை:
எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான புள்ளி ராஜா விளம்பரங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும்ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் வழக்கறிஞர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளபொது நலன் மனுவில், எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி என்ற பெயரில் பிரபலமாக்கப்பட்டுள்ள புள்ளி ராஜாவிளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
பெண்களால் மட்டுமே எய்ட்ஸ் நோய் பரவுவது போன்ற கருத்தை இந்த விளம்பரங்கள் வெளிப்படுத்திவருகின்றன. எனவே இந்த விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக இயக்குநர் ஆகியோருக்கு 2 வாரங்களில்பதில் தருமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications