ராமேஸ்வரத்தில் கடத்தப்பட்ட படகுகள் தானே திரும்பி வந்த மர்மம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

நவம்பர் 29ம் தேதி மீனவர்கள் கடத்தலில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 7 படகுகள் மர்மமான முறையில்ராமேஸ்வரம் படகுத் துறைக்குத் திரும்பி வந்துள்ளன.

கடந்த மாதம் 29ம் தேதி 8 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேர் விடுதலைப் புலிகள் என்றுசந்தேகிக்கப்படும் சிலரால் கடத்திச் செல்லப்பட்டனர். மறுநாளே ஒரு படகுடன் 32 மீனவர்களும்விடுவிக்கப்பட்டனர்.

எஞ்சியுள்ள 7 படகுகளையும் விடுவிக்க ரூ. 8 லட்சம் தரும்படி அந்தக் கும்பல் மீனவர்களிடம் கூறியிருந்தது. இந்நிலையில் படகுகள் ஏழும் பத்திரமாக படகுத் துறையில் கட்டப்பட்டுள்ளதாக க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல்வந்தது.

இதனையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். படகுத் துறையில் 7 படகுகளும் கயிற்றினால்கட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். யார் இந்த படகுகளை திருப்பிக் கொண்டு வந்தது என்பது தெரியவில்லை.

கடலோரப் படையின் தீவிர கண்காணிப்பையும் மீறி எப்படி படகுகள் படகுத் துறை வரை கொண்டு வரப்பட்டனஎன்பது போலீஸாருக்குப் புரியாத புதிராக உள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+