சென்னையில் இலங்கை ராணுவ தளபதி
சென்னை:
இலங்கை ராணுவ தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் லியோனல் பியனாட பலகெல்லே தனது நான்கு நாள்இந்திய பயணத்தின் இறுதியாக சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா பிராந்திய கமாண்டிங் அதிகாரிமேஜர் ஜெனரல் பரம்ஜித் சிங் லியோனலை வரவேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை தொடர்பான ஒத்துழைப்பு உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில்இலங்கை ராணுவ தலைமை தளபதியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளதாக இந்திய ராணுவ செய்திக்குறிப்பில்கூறப்பட்டிருந்தது.
இலங்கையிலேயே ராணுவப் பயிற்சி எடுத்து, ராணுவத் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள முதல் இலங்கைகுடிமகன் இவர்தான். இவருக்கு முன்பு இருந்தவர்கள், இங்கிலாந்து அல்லது அமெரிக்கா அல்லது இந்தியா எனவெளிநாடுகளில் ராணுவப் பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைத் தளபதியாக வருவதற்கு முன்பு, விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறைந்த வன்னி, யாழ்ப்பாணம் ஆகியபகுதிகளில் உயர் பதவிகளில் இவர் இருந்துள்ளார்.