For Daily Alerts
Just In
13 வயது மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்
சேலம்:
சேலம் குகை பகுதியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவியின் கற்பை சூறையாடிய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
குகை பகுதியில் உள்ள வீரலட்சுமி வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருபவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயதாகும் செல்வியின் கணக்கு ஆசிரியர் தேவகுமார், செல்வியை பள்ளியின் பின்புறப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் உறைந்த மாணவி இந்த சம்பவம் குறித்து சில நிாட்களாக பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் தனிமையில் அவர் அழுதபடி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது தான் அவர்களுக்கு உண்மை தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரையடுத்து ஆசிரியர் தேவகுமார் கைது செய்யப்பட்டார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, December 13, 2003, 5:30 [IST]