மேட்டூர் அணையைத் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே வாடும் பயிர்களைக் காக்க மேட்டூர் அணையை உடனடியாகத் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள வாண்டியார் இருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பாசாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், மேட்டூர் அணையிலிருந்து கடந்த 22ம் தேதி முதல்தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.
இதனால் பயிர்கள் தண்ணீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாண்டியார் இருப்பு உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வல்லம் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், ஓரத்தநாடு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள்விரைந்து வந்து விவசாயிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் இறுதியில் வரும்வியாழக்கிழமைக்குள் மேட்டூர் அணையைத் திறக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்துவிவசாயிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.