திமுகவின் முடிவிற்காகக் காத்திருக்கிறோம்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனியார் தொலைக்காட்சிகளும், தமிழ் சினிமாக்களும் தமிழைக் கெடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனஎன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதுகுறித்து திமுக எடுக்கப்போகும் முடிவிற்காக பாமக காத்திருக்கும். அதன்பிறகு எங்களது நிலைப்பாடை நாங்கள்தெரிவிப்போம்.

தற்போது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் விரசமான வசனங்கள் அதிகரித்து விட்டன. வசனங்களைகேட்கவே முடியவில்லை. எதிர்கால தலைமுறையினரை பாதிக்காத வகையில் தமிழ்த் திரைப்படங்களில் வசனங்கள்இடம் பெற வேண்டும்.

அதே போல தனியார் தொலைக்காட்சிகள் ஏற்கனவே தமிழ்க் கொலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன். இந்தஇரு ஊடகங்களும் தமிழ் மொழியை பாதிப்படைய வைத்து வருகின்றன. இந் நிலை மாற வேண்டும்.

இசை நிகழ்ச்சிகளில் தமிழுக்கு உரிய மரியாதையும், கெளரவமும் கொடுக்கப்படுவதில்லை. இதற்காக, கொங்குத்தமிழ் பன்னிசைப் பெருவிழா என்ற பெயரில் நாளை முதல் 2 நாட்களுக்கு தமிழிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளோம்.

இதை நாளை காலை 10 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இந்த பெருவிழாவின்போதுஇசை ஆய்வரங்கம், இசையரங்கம் நடைபெறும் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+