டிஸ்மிஸை எதிர்த்து வழக்கு தொடர அரசு ஊழியர் சங்கம் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெஸ்மா சட்டத்தின் கீழ் 2,777 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக அரசுஊழியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தின்போது,சமீபத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து டெஸ்மா மற்றும் எஸ்மா சட்டத்தின் கீழ் 2,777 அரசு ஊழியர்கள்டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டது.
வழக்கு தொடர்வதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் டிஸ்மிஸ் உத்தரவை விரைவில் வெளியிடுமாறுசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்வது எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications