கச்சத்தீவு பிரச்சினை: இலங்கையுடன் சின்ஹா பேச்சு
ராமேஸ்வரம்:
கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மற்றும் இலங்கை மீனவர்கள் இணக்கமாக மீன் பிடிப்பது தொடர்பாக இலங்கைஅரசுடன் பேச்சு நடந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படை வீரர்களால் பிடித்துச்செல்லப்படுவதும், அங்கு சிறை வைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீன் வலைகள்சேதப்படுத்தப்படுவதும் சமீப காலமாக தினசரி நடவடிக்கைகளாக மாறி விட்டன.
இதனால் ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இலங்கைகடற்படையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்கள் பயமின்றியும்,நிம்மதியாகவும் மீன் பிடிக்கஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில் தமிழக, புதுவை மீனவர் கூட்டமைப்பின் தலைவர் போஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடமிருந்து கடிதம் வந்துள்ளது. அதில், கச்சத்தீவில் இலங்கைமீனவர்களுடன், தமிழக மீனவர்களும் இணக்கமாக மீன் பிடிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைநடந்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வேதனையில் மூழ்கியுள்ள எங்களுக்கு லேசான ஆறுதலைத் தந்துள்ளது. இருப்பினும் பேச்சோடு நின்றுவிடாமல் எங்களது வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் வகையிலான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கவேண்டும் என்று மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications